உணர்ந்துகொள் !



வெற்றிகள் உனக்கு
சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்துகொள்...

மழை, நதி, விதை
விழுவதால் எழுபவை இவை..
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்திலேயே
உனக்கு கல்லறை கட்டுகிறாய்....

உன் சுவடுகள்
சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்
திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்
உன் பாதங்களை...

உன் வழிகலெங்கும்
தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....

நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்...

நீ
தோற்றுப் போனதாய்
நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்...

உணர்ந்துகொள்
நீ தோல்வியுற்றது
வாழ்க்கையிலல்ல
வாழ்க்கையை புரிதலில்...

------------------------------------------------------
மேலிருப்பது சுட்டது !
என்னையும் சுட்டது .
உங்களையும் சுடட்டும்
என்பதற்காக இங்கே பதிந்தேன் !


ரயிலில் பார்த்த அவள் !


அடுக்கி வைக்கபட்ட பற்கள்
ஒளிந்து கொண்ட கண்கள்
ஜொளித்த காது
எட்டி பார்த்த மூக்குமாய்
புன்னகையை அடிக்கடி
செதுக்கி கொண்டு இருந்தாள் !

அவள் கண்களும் கையும்
அவள் வாயைவிட அதிகம்
கதை பேசின !

புடவை அவள் அழகுக்கு
மின்னஞ்சல் அனுப்பிக்
கொண்டு இருந்தது !

கண்ணாடி வளையலும்,
தங்க செயினும்,
அவளுக்கு அழகு
சேர்க்க மறுத்தன !

அவளுக்கு வெட்கம்
கொஞ்சம் பக்கத்தில்தான் இருந்தது
ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது !

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி